Pages

Wednesday, September 6, 2017

இச் இச் இச்

1997 வரைக்கும் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பக்கம் மாலை 6மணிக்கு மேல எந்த வித வெளிச்சமும் இருக்காது. ஒரே இருள் சூழ்ந்து இருக்கும்.

அப்பொழுது காதலர்கள் ஒருவர் மடியில் இன்னொருவர் படுத்துகொண்டோ அல்லது பக்கத்தில் அமர்ந்து கொண்டோ இச் இச் இச் சத்தங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து கொண்டு இருப்பார்கள். அந்த பக்கமாய் போனால் இந்த சத்தத்தை தவிர்த்து வேறொன்றும் கேட்க முடியாது. இந்த சத்தங்களை கேட்பதற்காகவே கோடை விடுமறைக்கு சென்னை வருகின்ற பொழுது அவ்வப்போது (தினமும்) மெரினா கடற்கரைக்கு போவேன். இருட்டில் ஒன்றும் பார்க்க முடியாட்டியும். காதுகள் இருப்பதின் பயனை பயன் படுத்தி கொள்வேன். இரண்டு நிமிடங்கள் ... அப்படியே நடந்து போகிற மாதிரி.

22 வருடங்கள் கழித்து

இன்று appointment கொடுத்த வாடிக்கையாளர் அரை மணி கழித்து வர சொல்லவே வேறு வழியில்லாமல் பாதி வழியில் இருந்த நான் கோட்டூர்புரம் டர்ன்புல்ஸ்  பூங்காவிற்கு வந்தேன்.

சும்மா உட்கார்ந்திருக்க பிடிக்காமல் பூங்காவை சுற்றி வந்தேன். காதலர்கள். ஒருவர் மடியில் இன்னொருவர். பக்கத்தில் உட்கார்ந்தபடி. நெருங்கிய நிலை. தூரம் விட்டு விட்டு நான்கு ஜோடிகள். காதுகளை தீட்டி கொண்டு வேறு பக்கம் பார்த்தபடி நடந்தேன்.

சத்தங்கள் இல்லை. என்னவென்று பார்த்தேன். இரண்டு ஜோடி மகாபலிபுரம் குரங்கு சிலையை வார்த்தது போல் பேன் பார்த்து கொண்டு இருந்தனர். ஒரு ஜோடி மதியம் உணவை காணவில்லை போலும் ஒருவர் நகத்தை இன்னொருவர் கடித்து துப்பி கொண்டு இருந்தனர்.

இவர்களை வைத்து கொண்டு இந்தியா எப்படி வல்லரசு ஆகும்.

No comments:

Related Posts with Thumbnails