Pages

Sunday, June 14, 2015

அப்புசாமி படம் எடுக்கிறார்

தமிழில் சுவாரசியமான நகைச்சுவை எழுத்தாளர்களில் தேவன், ஜே.எஸ்.ராகவன் ஆகியோரை அடுத்து எனக்கு அதிகம் பிடித்தவர் பாக்கியம் ராமசாமி தான்.

இவரது கட்டுரைகளில் ப்ளஸ் டூ கட்டுரையை படித்தோமானால் வயிறு வலிக்க சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த கட்டுரையில் ப்ளஸ் டூ மாணவனது வீட்டில் இருப்போரின் மனநிலையை பகுடி செய்து இருப்பார். அந்த வீட்டில் ப்ளஸ் டூ என்ற நோய் எப்படி எல்லாம் தாக்கி இருக்கிறது என்று ஆர்ப்பாட்டமில்லாத எழுத்துக்களில் நம்மை சிரிக்க வைப்பார்.

இவரது அப்புசாமி சீதா பாட்டி கதையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது.

ஜே.எஸ்.ராகவன் அவர்களை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரது கட்டுரைகள் எல்லாம் தேவன் எழுத்துநடையில் அமைத்து இருக்கும். மெல்லிய கோடு வித்தியாசம் தான் இருவரது எழுத்துக்கும். இவரது சிவசாமியின் சபதம் நாவலை (???) படிக்க வேண்டிய ஒன்று.

இவற்றை தவிர்த்து அதிகம் வாய் விட்டு சிரித்தபடியே படித்த புத்தகம் என்றால் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய அமெரிக்காவில் கிச்சா. அப்புசாமி சீதா பாட்டி கதைகளில் வரும் ரசகுண்டு, பீமாராவ் இருவரில் யாரோ ஒருவரின் தாக்கத்தினால் எழுத பட்டாதாயிருக்குமென்று நினைக்கிறேன்.

முகில் எழுதிய புத்தகம் ஒன்று பெயர் மறந்து போய் விட்டேன், சிரிப்பு மருந்து. லொள்ளு காபியம் என்று நினைக்கிறேன்.

வாஷிங்டனில் திருமணம் ..... அந்த காலத்தில் அமெரிக்காவை பற்றி நம் மக்களுக்கு இருந்த ஆச்சரியத்தை, புரிதலை வைத்து எழுத பட்டது. வெளி வந்த காலத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டதாக கேள்வி பட்டு இருக்கிறேன். அதுவும் வானத்தில் பறந்து வரும் அப்பளங்களை அமெரிக்கர்கள் பார்த்து அது வேற்று கிரகவாசிகளின் விண்கலமோ என்று பயபடுவதை நகைச்சுவை பொங்க எழுதி இருப்பார் சாவி அவர்கள். பின்னர் தரம் தாழ்ந்த தரத்தில் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் (இன்றைய பொதிகை, முன்னர் டிடி தமிழ்) சீரியலாக எடுக்கப்பட்டது.

இணையத்தில் நகைச்சுவை மிளர வைக்கும் படி பலர் எழுதினாலும் எனக்கு ரொம்ப பிடித்தது   அக்காவின் எழுத்துக்கள் தான். அதிலும் 2008 வாக்கில் தன் காதிற்குள் வண்டு புகுந்த கதையும், புகுந்த பிறவு மருத்துவமனை சென்று வந்த அனுபவத்தையும் எழுதி இருப்பார். அந்த கட்டுரையை அவர் பதிவேற்றம் செய்த நடு இரவில் சில நிமிடங்கள் கழித்து படித்தேன். வேலை கிடைக்காத சமயம், கவலைக்குள் முழ்கி இருந்தென்னை பல மன தடைகளை தாண்டி சிரிக்க வைத்த கட்டுரை அது

வெட்டி வம்பு என்ற பெயரில் விஜய் குமார் என்பவர் எழுதி கொண்டு இருந்தார். சுஜாதாவின் எழுத்து தாக்கம் அதிகம் இருக்கும் இவரிடம். ஒரு சின்ன விஷ்யத்தை கூட சுவாரசியம் குறையாமல் எழுதுவார். சென்னைக்கு மாற்றலாகி வந்த உடனே எழுதுவதை விட்டுவிட்டர்

முத்தலிப் (பெயர் சரியானதா என்று தெரியவில்லை) எழுதிய ஒரு கட்டுரை தமிழ் இணைய உலகத்தையே சிரிப்பு கடலில் ஆழ்த்தியது. சுன்னத் கல்யாணம் பற்றிய அனுபவத்தை பேசும் கட்டுரை அது. அதற்கு முன்னர் அதை யாரும் எழுதி இருக்கிறார்களாயென்று தெரியவில்லை. அதிலும் சம்பவம் நடத்ததை பற்றியும் அந்த சம்பவத்திற்கு பிறகான நடந்தவை பற்றியும் அக்கட்டுரையின் படிக்கையில் .... வயிற்று பகுதி வலிக்குமளவிற்கு சிரித்தபடி இருப்போம். 

தங்கிலீஷில் (தமிழை ஆங்கில வார்த்தைகள் கொண்டு எழுதுவது) உஷா என்பவர் எழுதி கொண்டு இருந்தார். இப்பொழுது எழுதுகிறாராயென்று தெரியவில்லை. நகைச்சுவை மிளரும்

தேவன் அவர்களை பற்றி சொல்லாமல் விட கூடாது. விடவும் கூடாது. நாவல்களை தவிர்த்து கட்டுரைகள் சிறுகதைகள் தான் இவரது ராஜபாட்டையாக இருந்துள்ளது. அண்ணாசாலையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது, மதிய சாப்பாட்டிற்கு பின் கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில்  தேவநேய பாவாணர் நூலகத்தில் ரங்கூன் பெரியப்பா (???), மல்லரி ராவ் கதைகள் (??), சீனுப் பயல், விச்சுவுக்கு கடிதம் (???) ஆகியவற்றை படித்தேன்

அவற்றை படித்து முடித்த பின் தேவன் எழுத்துகளை தேடி தேடி வாங்கி,  என் மின்சார ரயில் பயணங்களை இனிதாகினேன்.

என்னவோ... எதையோ சொல்ல வந்து, சுற்றி வளைத்து எதையெதையோ சொல்லி கொண்டு வந்து விட்டேன். இப்பொழுது நான் படிக்க ஆரம்பித்திருப்பது பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய, உலக புகழ் பெற்ற அப்புசாமி தாத்தா & சீதா பாட்டி தோன்றும் "அப்புசாமி படம் எடுக்கிறார்".

No comments:

Related Posts with Thumbnails