Pages

Saturday, May 2, 2015

சுஜாதா :: ஜீனோ

ஒரு வாரம் முழுக்க நான் சுஜாதாவின் எழுதுக்களின் மூலம் நான் ஜீனோவோடு வாழ்ந்தேனென்றால் அது மிகையாகாது.  விஞ்ஞான புனைவுகளின் தன்மையாக கூட நான் வாழ்ந்தது இருக்கலாம். நாம் ஆசை படுவதை, சாத்தியமே இல்லாத ஒன்றை எழுதுக்களின் மூலம் காட்சி படுத்தி, அக்காட்சியின் ஒரு பகுதியாக நம்மையும் வாழ வைப்பதில் வாத்தியார் சுஜாதா வெற்றி பெறுகிறார்

ஒரு இக்கட்டான நிலையில் ஜீனோ இருக்கும் பொழுது இண்டெக்ஸ் கணிப்பான் அருகே தீப்பிழம்புகள் இன்னும் எட்டவில்லை என்று உதவி சொல்லுகிற சமயத்தில் நிம்மதியடைவது ரா, நிலா மட்டும் இல்லை நாமும் தான். ஆனால் நிம்மதிகளுக்கு அதிக ஆயுள் இல்லை என்ற வாழ்வியல் தத்துவத்தின் படி பெரிய சிவப்பு துண்டு கட்டி கொண்டு அதிகபடியாக பானம் அருந்திவிட்டு வந்த இளைஞர் கும்பல் உதவியின் கையிலிருந்த லேசர் தட்டை பிடுங்கி கொழுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டுவிட்டு ஆரவாரமாக புறப்பட்டு போகிற பொழுது நம் தலையில் இடியே விழுந்தது போலுணர்வோம்.

இதே போலொரு இடியை தான் ஜீனோவை ரவி மனோ ஆகிய சதிகார கும்பல் சாவடிக்கும் பொழுது நம் தலையின் மூலம் சந்தித்து இருப்போம்.

ஜீனோவிற்கு இறப்பா.... அது ஒரு இயந்திரம். நிலாவின் என் இனிய இயந்திரம் ; மற்றொரு சமயத்தில் குட்டி ஜீனோ. ஜீனோ ஒரு இயந்திரமும் அல்ல, அது ஒரு மடநாயும் அல்ல .... ஜீனோ ஒரு அறிவுள்ள நாய். நாய் என்று சொல்வதை விட நிலாவின் நண்பன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜீனோ ரஸ்ஸல், நீட்ஷே பற்றி எல்லாம் பேசும். முக்கியமாக ரவி மற்றும் மனோ ஆகியோரின் சதி திட்டத்திலிருந்து நிலாவை தப்பிக்க வைக்கும். இங்கு நான் வைக்கிறது என்ற சொல் பதத்தை தான் பயன் படுத்தி இருக்க வேண்டும் ஜீனோ இறந்த காலத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால். ஆனால் படித்தவர்களின் நினைவிலும் படித்து கொண்டு இருப்பவர்களின் நினைவிலும் படிக்க போகிறவர்களின் நினைவிலும் ஜீனோ வாழ்ந்து கொண்டே இருக்கும் அல்லது சுஜாதாவின் "என் இனிய இயந்திர" நாவலும் "மீண்டும் ஜீனோ" நாவலும் பதிக்க படும் வரைக்கும் ஜீனோ என்ற பொதுபார்வையிலான மடநாயும் நிலாவின் இனிய இயந்திரமுமான ஜீனோ வாழ்ந்து கொண்டே இருக்கும்

இறப்பென்பதென்ன ????

இக்கேள்வி நான் ஏழு வயதில் சிவாஜி நடித்த முதல் தேதி படம் பார்த்ததில் இருந்து என்னுள் தேவை இல்லாமல் வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு வாழ்க்கையில் வெறுப்படைந்து சுற்றி பிறப்பு இறப்பு குறித்து படித்த பின்னும் இக்கேள்வி வடிவம் பெற்றதே தவிர அழகிய வடிவம் பெற்றதென்னவோ ஜீனோவால் தான். ஒரு வேளை அழகிய வடிவம் தர கூடிய புத்தகங்களை நான் படிக்கவில்லை போலும்.

ஜீனோ நிலாவிடம் இக்கேள்வியை முன் வைக்கிறது ... இறப்பு என்பது உடலின் அழிவா அல்லது நாம் வாழ்க்கை முழுவதும் சேமித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அழிவா ?

என் வரையில் இறப்பு என்பது மனித உடல் செயலிழக்கும் ஒரு சம்பவம். அச்சம்பவம் நான் வாழ்க்கை என்று நாம் சொல்லி கொண்டு இருக்கும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடை பட்ட காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த இடை பட்ட காலத்தை சுவாரசியமாக்கி கொள்ள தான் நாம் வாழ்வியல் அடிமைகளாக மாறுகிறோம்.

ஏன் இந்த சுவாரசியத்தை தேடி போகிறோமென்றால் மிருகங்கள் போல் இல்லாமல் மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றான யோசிக்கும் திறமை இருக்கிறது.  சுவாரசியத்தை தேடி ஓடவில்லையென்றால் அந்த திறமை மனிதனை கொன்று விடும். அந்த மாதிரியான சுவாரசியத்தை உங்களது ஓட்டத்தில் ஜீனோ ஒரு பகுதியாக இருந்தால் நலம்

படித்து முடிந்த பின் மேன்மை பொருந்திய ஜீனோ இறப்புக்கு முன் சொல்லிய ஒரு கவிதை தான் மனதில் ஓலித்து கொண்டு இருக்கிறது. அது

"
அழகை பார் அழுக்கைப் பார்
பழகி பார் படுத்துப் பார்
விலகிப் பார் நெருங்கிப் பார்
உலகைப் பார் உள்ளே பார்
முத்தம் பார் ரத்தம் பார்
கத்தி பார் நெத்திப் பார்
வித்துப் பார் வாங்கிப் பார்
பத்துப் பேரை குத்திப் பார்
தேடிப் பார் தேடிப் பார்
திறமை இருந்தால் 
செத்துப் பார்.."

அதிகாலை நான்கு மணிக்கு ஜீனோவோடு முதன் முறையாக வாழ்ந்து முடித்த பின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றேன். தெருவில் நாய் ஒன்று கடந்து போனது ... அதை ஜீனோ என்று நினைத்து " ஒரு கவிதை சொல்வாயா.."  என கேட்டேன். அதற்குள் கடந்து போய் விட்டது. பின் அதனுடைய வடிவத்தை பார்த்து அது ஜீனோ இல்லை தெரு மடநாய் என்று தெரிந்தது. 

No comments:

Related Posts with Thumbnails