Pages

Thursday, March 14, 2013

சர்வாங்கம் - முழு உடல் முடி மழித்தல்


இப்படி ஒரு விஷயம் இருக்கிறதென்பதெனக்கு இந்த வார குங்குமம் வாங்கும் வரைக்கும் தெரியாது. சர்வாங்கம் - பிராமண ஆண் உடலில் இருக்கிற அணைத்து பகுதிகளிலும் இருக்கும் முடியை மழித்தல். இந்தியாவில் வேதம் ஓதும் பிராமண வட்டத்தில் மட்டும் இதை செய்வதற்கென்று ஆட்கள் இருக்கிறர்களாம். கல்யாண நிகழ்வுகளுக்கு முன் மாப்பிள்ளைக்கு சர்வாங்கம் செய்தவருக்கு ராஜ மரியாதை கிடைக்குமாம், மாப்பிள்ளையின் எழுச்சி திறனை அறிய.  இவை எல்லாம் குங்குமத்திலிருந்து அறிந்தவை. 

அதை படித்து விட்டு சற்று கைவசம் குறிப்புகளை படித்ததில், கொஞ்சம் தேடி பார்த்ததில் பல சுவையான விஷயங்கள் கவனத்திற்கு வந்ததெனக்கு. 

எப்படி ஒரு சிறு ஓடையில் இருந்து ஒரு பெரும் நதி உருவாகி, அது பல கிளை நதிகள் உருவாக வழி செய்வது போல தான் நம்பிக்கைகளும். முடி மழித்தலும். இந்த காலத்தில் முழு உடல் முடி மழித்தல் என்பது பலரின் விருப்பமாக இருந்தாலும், அந்த காலத்தில் இது மத ரீதியாக மட்டும் செய்ய பட்டது. 

மதங்கள் பலவற்றில் பின் பற்ற பட்டிருந்தாலும், பண்டைய ரோமானிய காலத்தில் ஆண்மையின் அடையாளதிற்காக பின் பற்றப்பட்டது. அப்படி முடி இருக்கும் ஆண்களின் உடலை அவலட்சணத்தின் அடையாளமாக பார்க்க பட்டது. ஆனால் இதற்கும் சர்வாங்கதிற்கும் வித்தாயசம் என்பது ஆண் உறுப்பு பகுதியில் இருக்கும் முடி மழித்தலில் இருக்கிறது. அந்த கால சில ரோமானிய சிற்பங்களில் "அந்த" முடி இருப்பாதாக தெரிகிறது. சர்வாங்கத்தில் உடலில் சிறு முடி கூட இருக்க கூடாதாம். 

ஹிந்து மதத்தில் பிறப்புக்கு பிறவு செய்ய படும் பதினாறு கடமைகளில் ஷ்தகர்ணா, முண்டானா என்ற மொட்டை அடித்தலில் சர்வாங்கம் வராது. ஷ்தகர்ணா என்பது ஹிந்து மதத்தில் எல்லோருக்குமானது. 

இஸ்லாமிய மார்கத்தில் முழு உடல் முடி மழித்தல் செய்கையை பின்பற்றினாலும், அது கட்டாயமான ஒன்றாக பின்பற்ற படுவது ஹனபி பிரிவில் தான். (இது ஷுன்னி துர்க்ஸ் பிரிவையும் உள்ளடக்கியது.) 

கிறிஸ்துவ மதத்தை உலக அளவில் பலர் பின்பற்றிய பொழுது அந்தந்த நாகரிகங்களில்  முழு உடல் முடி மழித்தல் என்ற விஷயம் அடிப்பட்டு போனதாக குறிப்புகள் கிடைப்பதின் மூலம் இது பல கலாச்சாரங்களில் இருந்துள்ளதாக தெரிகிறது. 

புத்த மதத்தில் துறவறம் ஏற்கும் ஒரு நபருக்கு சர்வாங்கம் செய்ய படுவது என்பது அந்த நபரை தூய்மை படுத்துவது போல் ஆகுமாம்.விவரங்கள் சரியாக தெரியவில்லை.  

இலக்கியங்களில் மற்றும் சொல்வழக்கில் சர்வாங்கம் என்பது இல்லவே இல்லை போல் இருக்கு. ஏனென்றால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை காண தேடுதல் பொறியில் தேடிய  பொழுது, கிடைத்த தேடுதல் முடிவுகள் ஏமாற்றங்களையே அளித்தது. ஒரு வேளை அதற்கு வேற பெயர் இருக்கும் போல. எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். 

பொதுவான உலக வழக்கில் சர்வாங்கத்தின் பழமை என்பது கிமு 3000 வரை. ஆனால் கால இடைவேளைகள் பல. முக்கியமாக பெண் உடல் சார்ந்த முடி மழித்தல் பற்றியும் அதனை சார்ந்த ஓவியங்கள் பற்றியும் தன குறிப்புகள் கிடைக்கிறது. அந்த குறிப்புகள் என்பது நேர் கருத்துக்களாக இல்லாமல் இருக்கிறது. 

அதில் முக்கியமாக சிற்ப்பங்களை உதாரணம் காட்டி தான் உள்ளன. அதாவது 1250 - 1450 வரையிலான இத்தாலி நாட்டு ஓவிய தொகுப்பு புத்தகமொன்றில் ஆண் உடலில் முடி இல்லாததை பார்க்கும் பொழுது, அது அந்த கால மத நம்பிக்கையை குறிக்கிறது என்று படித்து உள்ளேன். அது பொதுவான நம்பிக்கையா (ஷ்தகர்ணா போல) இல்லை குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமானதாயென்று தெரியவில்லை. 

இந்திய கோவில்களில் இருக்கும் சிற்பங்களில் கூட உடலில் எந்த முடியும் இல்லை. அப்படி என்றால் பண்டைய இந்தியாவில் சர்வாங்கம் என்பது பொதுவாக பின்பற்றி உள்ளார்களாக என்று தெரியவில்லை. பழைய கோவில் எதுக்காவது நீங்கள் போனால் அங்கிருக்கும் சாமி சிலைகளை பாருங்கள். 

மேலும் விவரங்களை தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். உங்களுக்கு எதாவது விஷயம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

No comments:

Related Posts with Thumbnails