Pages

Sunday, March 3, 2013

**கலவை - சுஜாதா : ஜென் கவிதை : கில்மா / பிட் படங்கள்**

இந்தியாவில் அகப்பெல்லா வகை இசையை வேறு யாரும் முயற்சித்து பார்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து ரகுமான் தான் முதன் முதலில் அதை பயன் படுத்தி என்றென்றுக்குமான இனிய இசையை வழங்கி இருக்கிறார் தமிழில். பெருமை நமக்கு. 


அகப்பெல்லா வகை இசை என்பது எந்த வித வாத்தியங்களின் உதவியும் இல்லாமல் வெறும் மனித குரலிலேயே இசை கோர்வையை அமைப்பது. இது அந்த காலத்தில் பிரெஞ்சு / இங்கிலாந்து போன்ற நாடுகளில் செல்வங்கள் இல்லாத தேவாலயங்கள் / வீதியோர நாடகங்கள் என்று பயன் படுத்தினார்கள். முக்கியமாக இந்த அகப்பெல்லா வகையை கையாள ஆழ்ந்த இசை ஞானம் வேண்டும். ரகுமான் கையாண்ட / இசையமைத்த அந்த அகப்பெல்லா பாடலை கேட்க இங்கே கிளிக்கவும். 

= = =


சமீபத்தில் நானெடுத்த புகைப்படங்களில் எனக்கு பிடித்ததொன்று.

= = =
இப்பொழுதெல்லாம் மன அமைதி விரும்பும் நேரங்களில் எல்லாம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் எட்டாவது நடைமேடையில் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். அப்படி படிக்க காரணம் அங்கிருந்து பார்க்கையில் பார்வைக்கு விரியும் கொளவாய் ஏரி தான். சுற்றியும் மலைகள் , அதிலிருந்து வரும் சிலு சிலு குளிர் காற்று. மெய் மறப்பது என்றால் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 


கட்டுமரத்தில் மீன் பிடிக்கும் தனியொரு மீனவர், கொக்கு, அடிக்கும் காற்றில் பறக்க முடியாமல் தட்டுதடுமாறி பறக்கும் காகங்கள்... ஏரியில் உற்பத்தி ஆகும் சிறு சிறு அலைகள் ...... மெய் மறந்து எங்கெங்கோ பறந்து கொண்டு இருப்பீர்கள் . அதுவும் மனத்துக்கு பிடித்த புத்தகத்தோடு அமர்கையில் ...சுகமோ சுகம்.  





அன்று 
மதியம் இங்கு போய்விட்ட பிறவு தான் கையில் எந்த புத்தகத்தையும் கொண்டு போகாதது ஞாபகத்துக்கு வந்தது, அப்பொழுது முதலாம் நடைமேடையில் எழுமலை அண்ணன் தனது எழுமலை புக் ஸ்டாலை மூடி கொண்டிருந்தார், என்னை பார்த்த உடனே .... சிறிது உரையாடலுக்கு பின், பூட்டி விட்ட கடையினை திறந்து , என்ன புத்தகம் வேண்டுமோ எடுக்க சொன்னார். அவருடைய மதிய சாப்பாட்டுக்கான நேரத்தை நான் சாப்பிட்டு விடாமல் ஆசான் சுஜாதா எழுதிய "கற்றதும் பெற்றதும்" பாகம் இரண்டை வாங்கிவிட்டு. மெய் மறக்கும் இடத்தில அமர்ந்து ஆசான் எழுதிய "யவனிகாவை மறக்க முடியவில்லை" கட்டுரையை படித்து கொண்டிருக்கையில் சிலு சிலு குளிர் காற்று, பலமான மதிய சாப்பாடு... நித்ரா தேவியின் வசம் என்னை நினைவை இழந்தேன். 

= = =
திருச்சியின் தலை சிறந்த பேச்சாளர் திரு.நீலகண்டன் பொதிகை பட்டிமன்றத்தில் பேசினதை பார்த்து ஆச்சரிய பட்டு போனேன். திருச்சியில் அவரது பேச்சை கேட்க ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு பிரபலம். பெரும்பாலும் கோவில்களில் தான் அவரை பேச்ச அழைப்பார்கள், அதனாலேயே புறநானூறு, கலிங்கத்துபரணி ....etc etc தான் அவர் மேடைகளில் பேசி கேட்டிருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சரித்திரம், பழங்கால தமிழர்களின் வாழ்வியல் என்று நன்றாக பேசுவார். 



பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு ஆராய்ச்சி பட்டம் தான் வாங்கிருந்தார். இப்பொழுது எவ்வளவோ தெரியவில்லை. நல்ல மனிதர். எனக்கு தமிழ் மீது ஆர்வம் வர அவருமொரு காரணம். 


SRC கல்லூரியில் இருந்து வந்து சமயபுரம் பஸ் ஏறும் பெண்களை சைட் அடிக்க நட்புகளோடு சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் காத்து கொண்டு இருந்த பொழுது "தம்பிகளா என்ன பண்ணுறீங்க" என்று குரல் கேட்டு பிறவு திரும்பி முதன் முதலில் அவரை பார்த்து பத்து வருடங்களாகிவிட்டது. இப்பொழுது என்னை அவருக்கு ஞாபகமிருக்குமாமென்று தெரியவில்லை.  


= = =
நதியின் அகண்ட பிரவேச போலவும், கடலோடு கலந்த பின் நதி நீர், மழை நீர் நிலை போலவும் காதலின் உச்ச அழகையும், அதனுடைய பிரிவின் சோகத்தையும்  கவிதைகளாய் வடித்து இருக்கிறார் நர்சிம் "உன்னை அழைத்துப்போக வந்தேன்" கவிதை தொகுப்பில். நான் வாசித்த முதல் காதல் கவிதை தொகுப்பு... ஒண்ணுமில்லாத வெறுமை மனகாரனாகிய என் மனதில் ஆயிரம் ஆயிரமாய் காதல் எறும்புகளை கொட்டி குறுகுறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது இக்கவிதை தொகுப்பு. நர்சிம் கையாண்டு இருக்கிற வார்த்தை ஜாலம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உதாரணத்திற்கு ...



"எனக்குப் பிடித்த 

எல்லாப் பாடல்களையும் 
உன் ஐ-பாடில் 
வைத்திருக்கிறாய் 

என்னை உனக்குப் பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே 
வைத்திருக்கிறாய்"


= = =
பிரமிள் அவர்களுக்கு கர்வம் கொஞ்சம் அதிகம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், அது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது வம்சி வெளியீட்டில் அவரது சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள "வரலாற்றுச் சலனங்கள்" யின் முதல் கட்டுரையான "ரசிகனும் சமூக மனப்பான்மையும்"  படிக்கும் போது.

= = =
இந்தியாவில் அணைத்து வணிக உணவகங்களிலும் இப்பொழுது பரவி வரும் frozen food கலாச்சாரம் வருகிறது.சிறு நகரங்களில் பள்ளி குழந்தைகளை குறி வைத்து frozen samosa , frozened veg roll போன்றவையை விற்கிறார்கள் ... இவை எல்லாம் சாப்பிட நல்ல மொறு மொறு என்று இருந்தாலும் சுவையோ தரமோ இருக்காது. இந்த அதிகபடியான மொறு மொறுவே குழந்தைகளை ஈர்க்கும். 



கொஞ்ச நாள் முன்பு  சமோசாவில் இருக்கும் stuffing  யை  சரியாக பத படுத்தாமல் இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் வந்தது frozened சமோசாவை இரண்டாவது தடவை செங்கல்பட்டில் சாப்பிட்ட பொழுது. அதனுள் இருந்த வெங்காயம் பச்சையாவே இருந்தது


= = =
எப்பொழுதெல்லாம் ஓர் படைப்பை தளமாய் கொண்டு மத சார்ப்பு பிரச்சனைகள் வருகிறதோ எனக்கு கொபயாஷி இஸ்ஸா எழுதிய ஜென் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்பு புள்ளி தெரியவில்லை ....



"கடவுள் காக்க வேண்டும் நம்மை

ஒரு மின்மினியின் நெருப்பு 
அதிகரித்தாலும் போதும்,
கடவுள் தான்
ஆம், கடவுள்தான் 
நம்மைக் காப்பாற்ற வேண்டும் !"


= = =
நேற்று மாலை கடற்கரை ரயில் நிலைய கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு, வெளியே வந்து அதற்க்கு தர வேண்டிய இரண்டு ரூபாய்க்கு  ஒரு ரூபாயாகவும் இரண்டு ஐம்பது பைசாகளுமாய் தந்த பொழுது, கல்லா உட்கார்ந்து இருந்த பெண்மணி "அம்பது காசு எல்லாம் செல்லாதுங்க...வேற குடுங்க" என்று சொன்னார். 



எவ்வளவு பேசி பார்த்தும் இந்தியாவில் இந்திய அரசாங்கம் வெளியீட்டுள்ள ஐம்பது காசு செல்லாது என்று வாதம் செய்தார். வேறு வழி இல்லாமல் அக்கம்பக்கம் போய் ஒரு ரூபாய் காசாக வாங்கி அவரிடம் தந்தேன், நூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று அவர் சொன்ன பொழுது. 


பிறவு என் பொது அறிவு மங்கி விட்டதோ என்று பயம் வந்து நான் முன்பு வேலை பார்த்த வங்கியில் ஒருவருக்கு போன் செய்து கேட்ட பொழுது "அதெல்லாம் வாங்கிப்போம்ப்பா ..." என்று சொன்னார்.   


= = =
தில்லானா மோகனாம்பாள் படத்தில் கர்நாடக இசையில் மயங்கிய துரைமார் தங்களது இசையை நீங்கள் வாசிக்க முடியுமா என்று சிக்கல் சண்முக சுந்தரம் இடம் கேட்பார்கள். 



பிறகு மேற்கத்திய இசையை தனது கோஷ்டியோடு வாசிப்பார். அந்த இசை கோர்வையை உருவாக்கியது மதுரை மணி ஐய்யர் என்பவர் என்பது எனது சிறு தேடலில் கிடைத்த தகவல். உண்மையா என்று தெரியவில்லை. 


அந்த இசை கோர்வையை பயன்படுத்தி கொண்ட கே.வி.மகாதேவன் அவர்கள் மதுரை மணி அவர்களுக்கு எந்த கிரெடிட்டும் தரவில்லையாம். 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.  


= = =
மாயங்களை செய்துவிட்டு தனது அரி வண்ணத்து புன்னகை உடன் மறைந்து போய் விடுகிறான் என் இசை தெய்வம். சொர்க்க காடுகளில் பாய்ந்து ஓடிபோகும் நதியில் குளித்து, அதன் குளுமையை உணர்ந்த தேசாந்திரி போல் ஆகிவிடுகிறேன் அவரது ஒவ்வொரு இசை கோர்வையை கேட்கும் பொழுதும், கேட்டு முடிந்த பொழுதுகளிலும். இளையராஜா இளையராஜா தான்.கோபுர வாசலிலே பட ஆரம்ப இசை ... அற்புதங்களின் ஜீவநதி 

பல வருடம் கழித்து இன்று அகத்தியன் இயக்கிய "காதல் கவிதை" படத்தை பார்த்தேன். படம் ரொம்ப பிடித்து போக காரணம் இளையராஜா ஸார் தான். பொதுவாய் ராஜா ஸார் இசையமைத்த பாடல்களுக்காக இல்லாமல் பின்னணி இசைக்காக பார்த்தேன். மிரட்டி பட்டைய கிளப்பி இருக்கார் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக உணர்தேன் பின்னணி இசை கோர்வையை கேட்ட பொழுது. 

= = =
"Barack Obama, The White House, and 9 others have Tweets for you"



என்னகொசம் இவங்களை யாரு  டிவிட் போட சொன்னது ...ஒழுங்காவே வேலை பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே . ஒபாமாவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கு. நான் டிவிட்டர் ல அக்டிவ்வா இல்லைன்னு தெரிஞ்சுகிட்டே ஒபாமா டிவிட்டர் ல எனக்காக டிவிட் போடுறாரு. இதுக்கு ஜிமெயில் காரனும் கூட்டு போல 


= = =
என்னவென்று தெரியவில்லை, எண்டமூரிவீரேந்திரநாத் எழுத்துக்கள் என்னுள் மாயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. சுய மதிப்பீடு விசாரணை ... துள்ளல் எழுத்துநடை, படிக்க ஆரம்பித்தால் முடிவு வரைக்கும் கொண்டு செல்லும் விறுவிறுப்பு. 



சொன்ன போனால் அவரது எழுத்துக்கள் யாவும் கிளாஸ் + மாஸ் என்றே தோன்றுகிறது. 


அவருடைய  த்ரில்லர் என்ற நாவலை தற்பொழுது வாசித்து கொண்டிருக்கிறேன். அசத்தலோ அசத்தல் படித்த வரைக்கும். இந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார். 


அவர்கள் எண்டமூரியின் நாவல்களில் முப்பதை மொழிபெயர்த்து வெளியீட்டு இருக்கிறார்கள்... கேட்டதில் முப்பதும்  ரூ.1500 ல் இருந்து ரூ.2000 க்குள் தள்ளுபடி உடன் வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். 

இந்த அல்லையன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிறது. கொஞ்சம் தள்ளி அடையார் ஆனந்த பவனும் இருக்கிறது. 

செவுக்குண வில்லாத பொழுது  சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டடத்தை கட்டி இருக்கிறார்கள் அல்லையன்ஸ் நிறுவனத்தார். 100 வருட பழமையான பதிப்பகம் இது.  


= = =
சென்னையிலேயே ரொம்ப பழமையான பகுதிகளில் ஓன்று சைதாபேட்டை, சுருக்கமாக சைதை. கிடைத்த குறிப்புகளின் படி 1730 ல் சைய்து கான் என்பவர் இந்த நில பகுதியின் சொந்தகாரர். அவரது பெயரில் இருந்து தான் சைதை தனது பெயரை பெற்றது. 



அடையாறு நதி பக்கத்தில் இருப்பதால், விவசாயம் நடந்திருக்கலாம் என்று நான் அறிந்த புவியியல் நிபுணர்கள் சொன்னார்கள். மதராஸ் டவுன் என்று அழைக்க பட்ட பகுதிக்கு ஒரே தரைவழி நுழைவாயிலாக பல காலம் இருந்து வந்துள்ளது. 


அந்த காலத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் மண்ணியல் / இயற்பியல் / தாவரவியல் / நில உருவாக்கவியல் / நிலத்தோற்ற வாழ்சூழலியல் ஆராய்ச்சிகளை தோட்டங்கள் வைத்து   மேற்கொண்டு பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்புகள் சரியாக இல்லை. அனால் பெரும் தோட்டங்கள் இருந்தற்கான குறிப்புகள் இருக்கிறது. 

திநகரில் ஒரு காலத்தில் இருந்த காடு / ஏரி சைதை வரை நீண்டு இருந்துள்ளது. 

படகு வழி போக்குவரத்து / வர்த்தகம் நடந்துள்ளதாக சைதை வாழ் பெரியவர்கள் சொல்கிறார்கள், இதற்கும் குறிப்புகள் இல்லை. 

தோட்டங்கள் வைத்த அந்த ஆங்கிலேயர்களது குறிப்புகளை தேடி கொண்டிருக்கிறேன். 


= = =
கற்றதும் பெற்றதுமில் சுஜாதா அவர்கள் பகிர்ந்தது - 



"முன்னாள் இந்நாள் முதல்வர்கள் 

சட்டசபையில் 
எதிரெதிரே மட்டுமல்ல 
அருகிலும்தான்"  - எழுதியவர் எம்.சேவியர்பால், கோயம்பத்தூர். 

ஹைக்கூ வடிவ கவிதைகளை எட்கூ என்று வாத்தியார் சொல்கிறார். அதாவது சமகால நிகழ்வுகளை விமர்சிக்கும் ஹைக்கூ கவிதைகள் தான் எட்கூ. சென்னையை பற்றிய  குறிப்புகளை தேடுகையில் கிடைத்தது. 

ஓர் சென்னை பற்றிய குறிப்பு - 

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு, சென்னையில் மிக முக்கிய பேருந்து நிறுத்தங்களிலேயே  ஒரு பேருந்து நடந்துனர் இருப்பாராம். பேருந்து  வருவதற்குள் அவரிடம் பயணசீட்டு வாங்கி கொள்ளலாமாம். இந்த விஷயம் வண்ணநிலவனின் "பின்நகர்ந்த காலம்" ல் படித்தேன். இந்த புத்தகம் இராமச்சந்திரன் என்ற சாதாரணன் வண்ணநிலவன் ஆன கதையை கட்டுரை வடிவில் சொல்கிறது.  


= = =
NESTLE DRY FRUITS ன்னு புது சாக்லேட் வகையறவை விட்டிருக்காங்க. செம மொக்கையா இருக்கு. சுவையே இல்லை. அவங்க ஏற்கனவே விட்டு MILK வகையறவுல கொஞ்சம் பட்டி தட்டி விட்டு இருக்காங்க போல. விலை ரொம்ப ஜாஸ்தி ரூ.25 



ஆனா, PARLE HIDE & SEEK CAFFE MACHO ன்னு புது வரைட்டி வந்திருக்கு. சுவைன்ன அப்படி ஒரு சுவை. BRITANNIA  CHOCO NUT சீரீஸூக்கு செம போட்டி. நெய் கொஞ்சம் நிறைய சேர்த்து இருக்காங்க போல. 


இதைய டைப் பண்ணிட்டு இருக்கும் பொழுது ஏனோ ஜேன் ரீக்ஹோல்ட் எழுதின ஒரு ஜென் கவிதை ஞாபகத்துக்கு வருது. அப்படி ஞாபகத்துக்கு வர காரணம் அதை நேத்து தான் படிச்சேன். அந்த கவிதை ....

"சம்மணமிட்டுத்
தியானத்திலிருக்கிறான் ஒரு 
சாகபட்சிணி. கோழிக்கறி 
வறுபடுகிறது."  


= = =
தமிழகத்தில் பல குஜால்ஸ் படங்கள் எடுத்து இருந்தாலும், அவைகளில் சொருவ படும் பிட் என்பது 1940 - 1970 வரை வெளிநாட்டில் எடுத்த உடலறவு காட்சிகளாக தான் இருக்கும். 



இதை தவிர்த்து,  முழுமையான உடலறவு காட்சிகளை மட்டும் கொண்ட படங்களை தயாரிப்பதிலும் தென் இந்தியாவில் கொஞ்சம் மந்தநிலையே இருந்தது. 


பிறவு பலான சிடிக்கள் விஷயத்திலும் இந்தியா பின் தங்கியே இருந்தது. அதனால் கில்மா விஷயத்துல வெளிநாட்டுகாரன் தான் டாப்பு. அவனிய பார்த்து தான் நம்ம ஆட்கள் கெட்டு போனாங்க 


பொருளாதார தேடல்களுக்கும், இந்த பிட்டுகளுக்கும் நிறையவே தொடர்பு உண்டு, வேலை தேடி வெளிநாடுகளுக்கு போனவர்கள், கொஞ்ச வருடம் கழித்து தாயகம் வரும் பொழுது அங்கு கிடைக்கும் கில்மா கேஸட்களை வாங்கி வந்தார்கள்..... அதாவது இதன் மூலம் 1970ல் இருந்து ஆரம்பித்தது. 

 சிவா புராணத்தை (சொக்கநாதர் திருவிளையாடல்) எடுத்து கொண்டால் அதில் தாய் - மகன் உறவு என்ற அளவுக்கு எல்லாம் கதை சொல்லி இருப்பர்கள். அதனால் புராணம் / இதிகாசம் கதை எல்லாம் கேட்டு கெட்டு போன சாராரி இந்தியனின் ரசிப்பு வெளிப்பாடு தான் கில்மா படங்கள்  . சினிமா மக்களை கெடுக்கவில்லை. 

No comments:

Related Posts with Thumbnails