Pages

Tuesday, January 17, 2012

**காமம் - Sexually Starved** - 5 :: }தாழ்ந்து போகுதல்{



தாழ்ந்து போகுதல் என்பது மனிதன் இரண்டு விஷயங்களில் மட்டுமே மேற்கொள்கிறான். ஓன்று வயிற்று பசி இன்னொன்று உடல் பசி. வயிற்று பசி என்று வரும் பொழுது மனிதனுக்கு பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்; ஆனால் காமம் என்ற கோட்பாட்டில் பத்தோடு வேறேதுவுமிருந்தால் அதுவும் பறந்து போகும். சாப்பாட்டை பசி என்று வரும்  பொழுது, எப்பொழுதும் வெறி பிடித்தது போல் சாப்பிட்டு பழகியவன், காமம் என்ற விஷயத்தில் அவனால் எப்பொழுதும் அப்படி செயல் பட முடியாது . முக்கியமாக காமம் என்பது இருவர் சமந்தபட்ட விஷயமாய் இருப்பதினால் பல நேரங்களில் தாழ்ந்து போக வேண்டி தான் இருக்கும். 


எல்லோருக்கும் உடலுக்கு தான் வயதாகுமே தவிர, மனசுக்கு வயதாகுவது இல்லை.இருபத்தைந்து வயதில் ஒருவனுக்கு இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்த என்ன உடலுறவு இன்பம் கிடைத்ததோ, அதே போல் அவனுக்கு அறுபது  வயதாகும் பொழுது அதே போன்ற இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்து அதே இன்பத்தை பெற வேண்டும் என்று நினைக்கும் எவனுமே தாழ்ந்து போக தான் செய்வான். என்ன தான் பணம், அதிகாரம் என்று ஒரு பெண்ணை வசபடுத்தி விட்டாலும், தாழ்ந்து போய் இன்பம் கொள்வார்கள் சிலர். 


ஒரு ஆய்வுக்காக நானும் என் நண்பனும் பாலியல் தொழில் செய்யும் சிலரை சந்தித்த பொழுது  " சில பேரு நாய் குட்டி மாதிரி தவிழ்ந்து போவாங்க, அடிமை மாதிரி சொன்னதையெல்லாம் செய்வாங்க... இன்னும் சில பேரு அவங்க மேல ஒன்னுக்கு எல்லாம் அடிக்க சொல்லுவாங்க" என்று அவங்க சொன்ன பொழுது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவுக்கு மனுஷங்கள் எல்லாம் போவாங்களா என்று. பிறகு அவர்களிடம் யார் எல்லாம் அந்த மாதிரி செய்ய சொல்லுவாங்க என்று கேட்ட பொழுது " பெரிய பெரிய ஆளுங்க, பணகாரங்க...." என்று சொன்னார்கள். ஏன் இப்படி செய்ய சொல்லுறார்கள்  என்று யோசித்த பொழுது காமத்தில் ஆதிக்கம் செலுத்துவதும், ஆதிக்கத்தில் இருப்பதும் ஒரு சுகம் தானே என்று ஏற்று கொண்டாலும், இது சதொமசொச்ஸ்ம  (Sadomasochism), ஆனால் இதை மன அழுத்தம் சார்ந்த விஷயமாக பார்க்க கூடாது. 


ஆனால் தாழ்ந்து போகுதல் என்பது காமம் சார்ந்த இன்பம் பெறவும் சிலர் மேற்கொள்ளலாம். இந்த வகையை சார்ந்தவர்களை சாடிஸ்ட் வகைறவிலோ மன அழுத்தம் வகைறவிலோ சேர்க்க முடியாது. நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய இன்பம் மறுக்க பட்ட இன்பம் இவர்கள் பல முறை தவறி போவர்கள் ; சிலர் கௌரவம் சமூக அந்தஸ்து  என்று பார்த்துக் கொண்டு  தியாகம் என்ற பெயரில் அவர்களை அவர்களே ஏமாற்றி கொண்டு போலியாக வாழ்வார்கள். 

இதே விஷயத்தை களமாக கொண்டு எடுக்க பட்ட பிரெஞ்சு படம் தான் "The Piano Teacher " . இதில் அவள் முதிர்கன்னி, சமூகத்திற்காக கௌரவ வேடம் அணிந்து கொண்டு வாழ்ந்தாலும், அடிமனதில் காமம் சார்ந்த இச்சைகளுடன் , தேடல்களுடன் தான் இருக்கிறாள். சுய- சித்ரவதைகளுடன்  மற்றவர்களின் அந்தரங்கத்தை எட்டி பார்ப்பதும், வீடியோ கிளப்பில் உடலுறவு காட்சிகளை பார்க்கும் பொழுது ; அவளுக்கு முன் வீடியோவை பார்த்து சுய-இன்பம் கண்டு துடைத்து போட்ட டிஷ்யூக்களை முகர்ந்து  பார்பதுமாய் காலத்தை கழிக்கும் அவள் ஒரு இளைஞ்சனை சந்திக்கிறாள்.

அவன் அவளது மாணவன். எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அவள் அடைகிறாள், அவன் அவளை புணர்கிறான். பிறகு அவனை தன் அடிமையாக நடத்தி, இன்பம் அடைகிறாள். அவன் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்கிறான், அடிமை, வடிகால் என்று அவனுடனான உறவு எத்தகையது  என்ற குழப்பத்தில் இருக்கிறாள் அவனுடன் சில காலங்களுக்கு. 

இதனிடையே அவளது செயல்களால் வெறுப்படையும் அவன் ஒதுங்கி போகிறான். இதனை அடுத்து அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவளது  மன இச்சைகளை ஓர் கடிதம் மூலம் அவனுக்கு சொல்கிறாள் ; " நான் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நீ வந்து என்னை அடித்து, சுவரில் என் தலையை மோதி, கைகால்களை கட்டி போட்டு, துன்புறுத்தி ....... என்னை புணர வேண்டும். அப்பொழுது பக்கத்து ........" என்று போகிறது அந்த கடிதம். பாலியல் வேட்கையும் அதனூடான பிறழ்வு நிலை மன போராட்டங்களையும் நன்றாக காட்சி படுத்திருப்பார் இயக்குனர். 

ஆனால் இந்த படத்தில் தாழ்ந்த நிலை என்பது அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை, சமூக அந்தஸ்து போன்றவற்றால் வருகிறது  என்று சொல்லிபட்டிருக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்த ஒருவன் இந்த விஷயத்தில் தாழ்ந்த நிலைக்கு போவானா

போவான் என்று சொல்கிறது சரித்திரம். 

மும்தாஸை பார்க்கும் முன்னரே ஷாஜகானுக்கு திருமணம் ஆகிவிட்டது, உடல் சார்ந்த இன்பத்தை போதும் போதும் என்றளவுக்கு அனுபவித்திருந்தார் . ஆனால் மும்தாஸ் மேல் காதல் கொண்டார் ஷாஜகான், அப்படி காதல் கொண்டதற்கு காரணம் மும்தாஸின் அழகு என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். திருமணதிற்கு பின்  மும்தாஸின் அந்தபுர பறவையாக மாறி போனார் ஷாஜகான். ராஜ்ய முடிவுகளை எல்லாம் மும்தாஸ் தான் எடுத்ததாகவும் , மன்னர் அதை நடுமுறை படுத்தும் அமைச்சராக இருந்தாகவும் சொல்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறது இந்த விவகாரத்தை. 

மும்தாஸ் உண்மையாக மன்னரை காதலித்தாரா இல்லை வேண்டும் என்று செய்தாரா என்று யாராலும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. மும்தாஸின் வியாபாரி தந்தையை பற்றி அவ்வளவாக தெரியவில்லை, அவர் தீர்மானத்தின் மூலம் என்ன என்ன பலன்களை அனுபவித்தார் என்று தெரிந்தால் மட்டுமே மும்தாஸ் - ஷாஜகான் உறவை பற்றி சொல்ல முடியும்.  எப்படி இருந்தாலும் அதற்க்கு மும்தாஸ் கூடுத்த விலை ; அவர்களது உயிர். ஷாஜகான் மும்தாஸை படுக்கை அறை இன்பம் தரும்  பொருளாக பார்த்தார். மும்தாஸ் பிள்ளைகளை பிரசவித்து  பிரசவித்தே  உயிரை விட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் யார் யாருக்கு தாழ்ந்து போனார்கள் என்பது காலத்திற்கே தெரிந்த உண்மை ; சரித்திர புதிர். 

தொடரும். 

Related Posts with Thumbnails