Pages

Tuesday, January 26, 2010

இலங்கை ..........?????

குறிப்பு - தற்பொழுது வந்துகுள்ள செய்திப்படி ராஜ்பஷே இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாராம் .......ஈழத்திற்கான இருந்த வாய்ப்பு இனிமேல் இருக்குமா .....தமிழர்களின் நிலை இனிமேல் எப்புடி இருக்கும் ....... எல்லாமே பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கு

பொதுவாய் நான் ரொம்ப அரசியல் பேச மாட்டேன்...... ஏதோ ஒரு சின்ன தயக்கம் தான் காரணம். ஆனால் அதையும் மீறி என்னை இந்த பதிவை எழுத வைச்சுருச்சு தொலைக்காட்சியில் பார்த்த செய்தித் தொகுப்பு.

= = = =

வுனியாவில் ஒரு பெரியவர் செய்தியாளரிடம் ......." எங்களை அடக்கிப்புட்டு ...உரிமை இருக்கு ஒட்டு போடவா ன்ன ....என்ன அர்த்தம் ....எங்களுக்கு அடங்கி போகத்தான் உரிமை தந்தார்களா......??? அடங்கி போவது தான் எங்களின் உரிமையா .....???"

= = = =

கொஞ்ச நேரத்தில் வேறொரு சேனலில் இன்னொரு பெரியவர் (இவர் படித்தவர் போல் இருந்தார் பார்பதற்கு) ....." lets forget about the past ...lets hope for things going to happen ......."(முழுசாய் கேட்க முடியல)

= = = =

இந்த இரு மாறுப்பட்ட கருத்துக்கள் தான் என்னை மிகவும் யோசிக்க வைச்சுருச்சு. இதை நான் சமுதாயத்தின் இரு நிலைக்களில் இருக்கும் .....வேறுப்பட்ட பொருளாதார நிலையில் இருக்கும் இரு மனிதர்களின் வாக்குமுலமாகவே நான் பார்க்கிறேன்.
= = = =
பொதுவாய் நான் கோவப்பட மாட்டேன் .....ஆனால் ராஜபக்ஷேவின் ஒரு பேட்டியை பார்த்தப் பிறகு .....

ஆணவம் அவரின் பேச்சில் ...... தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதராய் இருக்கலாம் ...... ஆனால் அவர் ஒரு நல்ல அரசியல்வாதியா என்பது ஒரு கேள்விக்குறியே .......
= = = =
இன்னொரு சேனலில் ஒரு சிங்களர் (ஒட்டு போட வந்தவர்) "எந்த அரசும் இங்கே அமைதியையும், ஒற்றுமையையும் இங்கே நிலைநிறுத்த எண்ணம் கொள்ளவில்லை ......"
= = = =

கடைசியாக .......அமைதியாய் பின்வாங்கும் ராஜபக்ஷேவை (வேறு யாரையும்) நம்ப கூடாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.....

டிஸ்கி - கம்ப்யூட்டர் ல ஒரே வைரஸ் ...பூச்சாண்டி படத்தை போட்டால் கம்ப்யூட்டர் சரியாகி விடும் என்று நண்பன் சொன்னான். ஆனால் கூகிள் ல தேடி பார்த்தேன் ...பூச்சாண்டி படம் கிடைக்கவில்லை. (ராஜபக்ஷேவுக்கும் இந்த டிஸ்கிக்கும் எந்தவித தொடர்ப்பும் இல்லை )

4 comments:

நட்புடன் ஜமால் said...

பூச்சாண்டி.

உங்க டிஸ்கிக்குக்கும் இந்த கமெண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை ...

மேவி... said...

@ jamal : raittu...

Anonymous said...

இமசை அரசன் இரண்டாம் மகிந்தகேசி
தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் அப்படி ஒருவர் இருந்தால்.

மேவி... said...

@ anani : yes boss...correct ah sonninga

Related Posts with Thumbnails